சலுகைகள்: 53 டூவீலர் வழங்க 288 பேருக்கு அழைப்பு அலைக்கழிப்பால் மாற்றுதிறனாளிகள் எரிச்சல்

கருத்துகள் இல்லை
சலுகைகள்: 53 டூவீலர் வழங்க 288 பேருக்கு அழைப்பு அலைக்கழிப்பால் மாற்றுதிறனாளிகள் எரிச்சல்: விருதுநகர்:விருதுநகர் மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கான இலவச டூவீலர்களை, 53 பேருக்கு வழங்க, 288 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களை அலைக்கழிப்பு செய்து, எரிச்சலடைய செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக மாற்று திறனாளி நலத்துறை அலுவலகத்தில், இலவச மூன்று சக்கர டூவிலர் வழங்க, மாற்று திறனாளிகள் 288 பேருக்கு, நேற்று நேர்முக தேர்வு நடந்தது. இதை, மாற்று திறனாளிகள் அலுவலர் மணி, ஆர்.டி.ஓ., அலுவலக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எலும்பு முறிவு டாக்டர் ஜெகநாதன் நடத்தினர். இந்த ஆண்டு, அரசு சார்பில் 11 , எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் 42 டூவீலர் என, 53 பேருக்கு டூவீலர் வழங்க, அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், நேர்முக தேர்விற்கு, ஐந்து பங்கிற்கு மேல், கூடுதலாக மாற்று

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

லால்குடியில் மாற்று திறனாளிகள் மதிப்பீடு முகாம்

கருத்துகள் இல்லை
மாற்று திறனாளிகள் மதிப்பீடு முகாம் லால்குடி: லால்குடியில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீடு முகாம் நடைபெற்றது. இதில் 262 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் லால்குடியில் நடைபெற்றது. எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார்.
நகர செயலாளர் துரைமாணிக்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வைரமணி, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வன், ஊராட்சி தலைவர்கள் மதிவாணன், கோல்டன் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கல்லக்குடி திமுக பிரமுகர் பால்துரை முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கருணாகரபாண்டியன், செவித்திறன் நிபுணர் செல்லம், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் கதிர்வேல் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை மற்றும் மதிப்பீடு செய்து உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்தனர். முகாமில் செம்பரை கோபி, மாந்துறை சரவணன், நகர பிரதிநிதி இளங்கோவன், கர்ணன் லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, புவாளுர், குமுளுர், அழுந்தலைப்பூர், உட்பட 70 கிராமங்களை சேர்ந்த மாற்று திறனாளிகள் 262 பேர் கலந்துகொண்டனர். இளநிலை மறுவாழ்வு அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடநீக்கியல் வல்லுனர் ஆனந்த் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

விளையாட்டு: உலக சாம்பியன் பட்டம் வென்றவர் கண்களை கட்டி செஸ் விளையாடி மாற்று திறனாளி பெண் அசத்தல்

கருத்துகள் இல்லை
விளையாட்டு: திருச்சி: மாற்று திறனாளிகள் உலக செஸ் சாம்பியனான ஜெனித்தா ஆண்டோ, கண்களை கட்டி செஸ் விளையாடி வெற்றி பெற்றார்.
மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் திருச்சியை சேர்ந்த ஜெனித்தா ஆன்டோ. இவர், கண்களை கட்டிக் கொண்டு செஸ் விளையாடப் போவதாக அறிவித்திருந்தார். திருச்சியில் நேற்று போட்டி நடந்தது. அவருடன் விளையாட மண்ணச்சநல்லூர் அரசு பள்ளி ஆசிரியர் முகமது அலி தேர்வானார். இவர், கடந்த 4ம் தேதி நடந்த மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தவர். கலெக்டர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்ததோடு, முழு போட்டியையும் பார்த்தார்.

முகமது அலியின் ஒவ்வொரு காய் நகர்த்தல் குறித்தும் நடுவர் தினகரன் கூற பதிலுக்கு எந்த காயை நகர்த்த வேண்டும் என்று ஜெனித்தா கூறினார். அதன்படி நடுவர் காயை நகர்த்தினார். 44வது நகர்த்தலில் ஜெனித்தா வென்றார். அவருக்கு மாவட்ட நலப்பணிகள் நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

ஜெனித்தா கூறுகையில், வீட்டில் குடும்பத்தினருடன் கண்ணைக் கட்டிக் கொண்டு செஸ் விளையாடி உள்ளேன். வெளியிடத்தில் விளையாடுவது இதுதான் முதல் முறை. கண்ணைக் கட்டிக் கொண்டு விளையாடுவதன் மூலம் கவனிப்பு திறன் அதிகரிக்கும். இதில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

திருச்சி பொன்மலைப்பட்டியை சோ¢ந்த ஜெனித்தா ஆண்டோ 3 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இரு கால்களும் செயல் இழந்தன. 2007&ல் போலந்தில் நடந்த மாற்றுத் திறனாளிகள் செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 2010&ல் ரஷ்யாவில் நடந்த போட்டியில் மாஸ்டர் பட்டம், இந்தாண்டு ஜூனில் செக் குடியரசில் நடந்த உலக செஸ் போட்டியில் பெண்களுக்கான சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக